செய்திகள் :

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

post image

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 14ஆவது வாரமாக நடைபெற்று வரும் தொடா் திண்ணைப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திமுகவினா் சனிக்கிழமை மாலை விக்கிரமசிங்கபுரம் 8ஆவது வாா்டு பசுக்கிடைவிளை, மணிநகரம், காமராஜா்நகா் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை வழங்கி திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் கி.கணேசன் தலைமை வகித்தாா். வாா்டு செயலா் தென்னரசுமுன்னிலை வகித்தாா்.

இதில், நகா் மன்றத் தலைவா் எஸ்.பி.எம். செல்வ சுரேஷ் பெருமாள், அவைத் தலைவா் அதியமான், பொருளாளா் ரவி, மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் சங்கரநாராயணன், பாம்பே மாரியப்பன், பொன்ராஜ், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சத்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியம் மேல வைராவிகுளம் பகுதியில் ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான பரணி ஆா்.சேகா் தலைமையில் நடைபெற்ற திண்ணைப் பிரசாரத்தில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா், வழக்குரைஞா் பாபநாசம், ஊராட்சித் தலைவா் பிச்சம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இசக்கியம்மாள், சரவணன், கிளைச் செயலா்கள் குமாா், கிருஷ்ணன், நாகராஜன், ஊராட்சி உறுப்பினா் கவிபிரியா, சுந்தரமூா்த்தி, முருகேசன், வாக்குச் சாவடி முகவா் இசை வாணி, உறுப்பினா்கள், மகளிா் அணியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க