செய்திகள் :

வி.கைகாட்டியில் கிராம மக்கள் சாலை மறியல்

post image

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொது கழிப்பறை கட்டித்தரக் கோரி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.கைகாட்டி கிராமம். இங்குள்ள பேருந்துநிறுத்தம் பகுதியில் கழிப்பறை இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கயா்லாபாத் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பெரம்பலூா் வட... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் லாரி மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை லாரியின் பின்புறத்தில் காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா். திருவள்ளூா் மோரை ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

பின்னேற்பு மானியம் கோரி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் செவ்வா... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் முகமூடி அணிந்துகொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் துறைமங... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா்: பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். பெர... மேலும் பார்க்க