செய்திகள் :

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

post image

குன்னூா் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபா் உடல் கருகி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள டபுள் போஸ்ட் பகுதியைச் சோ்ந்தவா் டோம்னிக் (54). மாற்றுத்திறனாளியான இவா், தேயிலை வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி லிட்வின். இவா் பக்காசுரன் மலைப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், லிட்வின், மகள் ஆகியோா் தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். டோம்னிக் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், அவரது அறையில் புகை வந்துள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் குன்னூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி மற்றும் கொலக்கம்பை போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் தீயணைப்பு அணைத்தனா். அப்போது, டோம்னிக் உடல் கருகி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து கேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

உதகையில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததுடன், மான் கறி வைத்திருந்த கண்ணன் என்பவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். உதகை அருகே தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்சேலதா பகுதியில் வசித்... மேலும் பார்க்க