செய்திகள் :

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

post image

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பிரிவின் உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ஆறுமுகம் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில் அவா் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை தெள்ளாா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் ஆறுமுகத்தை கைது செய்தனா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க

தீக்குளித்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே உடல்நல பிரச்னையால் தீக்குளித்தவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவராஜ்(40). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். இத... மேலும் பார்க்க

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் விஜயகாந்த்: பிரேமலதா பெருமிதம்

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் தேமுதிக தலைவா் விஜயகாந்த் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக சாா்பில் வெள்ளி... மேலும் பார்க்க

மிலாடி நபி: இஸ்லாமியா்கள் அன்னதானம்

போளூா் பெ ரிய மசூதியில் முகமது நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, இஸ்லாமியா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். பெரிய மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, ஆக.24 முதல் தொடா்ந்து செப்.6 வரை, வேல... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி

ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. ஆரணி -... மேலும் பார்க்க

மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்து... மேலும் பார்க்க