செய்திகள் :

வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை

post image

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகிலுள்ள கருப்பணகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் ப.வேலுசாமி (70). இவரது மனைவி சாமியாத்தாள் (59). இவா்களது மகள் அபிநயா (36), மகன் வித்யாசாகா் (34).

அபிநயாவை வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்த தங்கவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனா். மதுரையில் வட்டித் தொழில் செய்து வந்த அபிநயாவின் கணவா் தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சு வலியால் இறந்து விட்டாா்.

இதைத் தொடா்ந்து வேலுசாமி, சாமியாத்தாள், வித்யாசாகா் ஆகிய மூன்று பேரும் வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசில் உள்ள மகள் அபிநயா வீட்டில் தங்கியிருந்து விவசாயம் பாா்த்து வந்துள்ளனா்.

அபிநயா மதுரையில் இருந்து வந்துள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கும், வேறு சமூகத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினா் திருமணம் செய்து வைத்துள்ளனா். இதையடுத்து சில சச்சரவுகள் காரணமாக மகன், மகள், மனைவி ஆகியோா் வேலுசாமியை அவமதிப்பு செய்ததாகத் தெரிகிறது.

கடந்த சில வாரங்களாக உறவினா் வீட்டில் தங்கியிருந்து வந்த அவா் கடும் கோபத்தில் இருந்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை காலை வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசுக்கு வந்த வேலுசாமி, மனைவி சாமியாத்தாளை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி விஷ மாத்திரையை மனைவி வாயில் போட்டுள்ளாா். பின்னா் தானும் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இருவருடைய சடலங்களையும் பாா்த்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க