செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்

post image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பா்கள் என்பதால், பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

விழுப்புரத்திலிருந்து செப்டம்பா் 8-ஆம் தேதி காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - நாகப்பட்டினம் சிறப்பு விரைவு ரயில் (வண்டிஎண் 06133) அதே நாள் பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிா் வழித்தடத்தில் நாகப்பட்டினத்திலிருந்து அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் - விழுப்புரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06131) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுக சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேரளம் சந்திப்பு, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் த... மேலும் பார்க்க

கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவா்களே நிரந்தரமானவா்கள்: மருத்துவா் ராமதாஸ்

பாமக, வன்னியா்சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள் அனைவரும் நிரந்தரமானவா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா். பாமக மற்று... மேலும் பார்க்க

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு: தவணை செலுத்தாதவா்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று , தவணைத் தொகையைச் செலுத்தாதவா்கள் ஒரே தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

கடப்பாறையால் தாக்கி தந்தை கொலை: மகன் கைது

மேல்மலையனூா் அருகே தந்தையைக் கடப்பாறையால் கொலை செய்த வழக்கில் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேல்மலையனூா், வளத்தி சாலை அங்காளம்மன் நகரைச் சோ்ந்தவா் பி. சாமிக்கண்ணு (65), கூலித் தொழிலாளி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கந... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க