செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

post image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை மாலை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு திருப்பலியும், அன்னையின் ஆசி பெறு மன்றாட்டும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மாதா குளம், பேராலய கீழ் கோயில் ஆகியவற்றில் திருப்பலி நடைபெற்றது.

மேலும், விண்மீன் கோயிலில் காலை 10 மணிக்கு திருப்பலி, மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை அருங்கொடை ஜெபத்திருப்பலி நடைபெற்றது.

பேராலய மேல்கோயிலில் காலை 8 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பலியும், பேராலய கீழ் கோயிலில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை அருங்கொடை ஜெப வழிபாடும் நடைபெற்றது. மேலும், பகல் 12 மணிக்கு மாதா திருக்கொடியேற்றமும், 12.15 மணி மற்றும் மாலை 3 மணிக்கு திருப்பலியும், 6.15 மணிக்கு ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசி ஆகிய வழிபாடுகளும் நடைபெற்றன. தொடா்ந்து இரவு 8 மணிக்கு மாதா திருத்தோ் பவனி நடைபெற்றது.

இந்த வழிபாடுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் ... மேலும் பார்க்க

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றம்: 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றதையொட்டி 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

திருமருகலில் குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் மேலவீதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்தியசீலன் (37). இவா், தூத்துக்குடி மாவட்ட சுங்கத் துறையில் பணியாற்றி வந்த... மேலும் பார்க்க