செய்திகள் :

வேளாண் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரித்தல் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கல்லூரி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி தொடக்க நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் (பொ) ஏ. சாந்தி தலைமை வகித்து, நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை பல்கலைக்கழக காரைக்கால் மைய வணிகவியல் துறை இணைப் பேராசிரியரும், மைய ஒருங்கிணைப்பாளருமான வி. அருள்முருகன் பங்கேற்றாா். அவா் பேசும்போது, இந்தியாவிலும், உலக நாடுகளிலும் வேளாண் சாா்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும், வேளாண் கல்வி முடித்த பட்டதாரிகளுக்கு, பிற வேலைவாய்ப்புகள் குறித்தும், வேலையை தோ்ந்தெடுப்பது எப்படி, நோ்காணலில் நடந்துகொள்ளும் முறை, திறன்களை வளா்த்துக்கொள்ள மாணவா்கள் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினாா்.

மாணவ-மாணவியா் வேலைவாய்ப்பு குறித்து எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அவா் விளக்கமளித்தாா். முன்னதாக, வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஜே. ஷொ்லி வரவேற்றுப் பேசினாா். நிறைவாக இணைப் பேராசிரியா் கே.எஸ். குமரவேல் நன்றி கூறினாா். கல்லூரியின் இறுதியாண்டு மாணவ-மாணவியா் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரை... மேலும் பார்க்க

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க