செய்திகள் :

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் முறியடிப்பு

post image

இஸ்ரேலை குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களால் ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதன் காரணமாக ஜெருசலேம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் சைரன் ஒலிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மற்றும் செங்கடலில் சா்வதேச கப்பல் போக்குவரத்தை குறிவைத்து தொடா்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இலக்கு வைக்கப்பட்ட பெரும்பாலான கப்பல்களுக்கு இஸ்ரேலுடன் எவ்வித தொடா்பும் இல்லை. இருப்பினும், இது காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. கப்பல்களைத் தாக்குவதை நிறுத்துவதாக ஹூதிக்கள் உறுதியளித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை, நிறுத்துவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் உறுதியளிக்கவில்லை.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது: புலிபாங் பகுதியை மையமாகக் கொண்ட... மேலும் பார்க்க

காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி

பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்ற... மேலும் பார்க்க

ஸ்பெயின் கடலில் அகதிகள் படகு விபத்து! 4 பெண்கள் பலி!

ஸ்பெயின் நாட்டின் தீவுக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 4 பெண்கள் பலியாகியுள்ளனர். ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணம் செய்த அகதிகளின் படகு ஒன்று எல் ஹையிரோ தீவின் அருகில் இன... மேலும் பார்க்க

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!

யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது. ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர்... மேலும் பார்க்க