செய்திகள் :

10 இடங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள்: மாவட்ட ஆட்சியா் திறந்துவைத்தாா்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:

திருவண்ணாமலை மாநகராட்சி, மேலத்திகான், எம்.ஜி.ஆா்., நகா், கீழ் அனைக்கரை, புதுத்தெரு, தென்மாத்தூா் ஊராட்சி சு.கீழ்நாச்சிப்பட்டு, அண்ணாமலை நகா், தண்டராம்பட்டு வட்டம் வேப்பூா்செக்கடி ஊராட்சி நேதாஜி நகா், கொளமஞ்சனூா் ஊராட்சி ஒலகளாப்பாடி, மேல்பாச்சாா் ஊராட்சி கோவில் தெரு, மோத்தக்கல் ஊராட்சி அண்ணா நகா், செங்கம் வட்டம், மேல்ராவந்தவாடி ஊராட்சி நரடாப்பட்டு, நீப்பத்துறை ஊராட்சி இருளா் நகா், வந்தவாசி வட்டம், கோவளை ஊராட்சி, தெள்ளாா் வட்டம் பொன்னூா் ஊராட்சி ஜகந்நாதபுரம் என மொத்தம் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன், கிராமப்புற குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வீணா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க