செய்திகள் :

189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உயர் நீதிமன்றம்

post image

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பயணிகள் கூட்டம் அதிகமான மாலை 6.24 மணிக்கு தொடங்கி அடுத்த 10 நிமிடத்தில் மாட்டுங்கா, மாகிம், பாந்த்ரா, கார்ரோடு, ஜோகேஸ்வரி, பயந்தர், போரிவலி ஆகிய இடங்களில் 7 ரயில்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது.

பிரஸ்ஸர் குக்கரில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். அனைத்து வெடிகுண்டுகளும் முதல் வகுப்பு பெட்டியில் நடந்தது. குண்டு வெடிப்பில் மேலும் 800 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2015-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. இத்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதிகள் அனில், ஷியாம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடப்படாவிட்டால், அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது.

மேலும் ஏழு குற்றவாளிகளான முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முசம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகியோருக்கு குற்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பிற்குப் பிறகு 12 குற்றவாளிகளும் இப்போது விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கமல் அன்சாரி கொரோனா தொற்றின் போது உயிரிழந்துவிட்டார். இத்தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறி... மேலும் பார்க்க