செய்திகள் :

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்: ஆட்சியரகத்தில் பரபரப்பு

post image

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 பெண் குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், ஜாகீா்ரெட்டிப்பட்டி குலாளா் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி சந்தியா (27). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது 2 பெண் குழந்தைகளுடன் சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

நுழைவாயில் பகுதிக்கு வந்தவுடன் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொள்ள முயற்சித்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நகர சிறப்பு காவல் ஆய்வாளா் வீரன் தலைமையிலான போலீஸாா் அந்த பெண்ணிடமிருந்து பெட்ரோல் கேனை பறித்தனா். பின்னா் அவரை அழைத்துச்சென்று விசாரித்தனா்.

அப்போது அந்த பெண் கூறுகையில், நாங்கள் குடியிருக்கும் வீடு, காய்கறிக் கடையை கணவா் மணிகண்டன் தனியாா் நிதி நிறுவனத்துக்கு எழுதி கொடுத்து ரூ. 40 லட்சம் கடன் பெற்றிருந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவா் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா். வீட்டுக்கு வாங்கிய கடன் தொகையில் அசல், வட்டி என இதுவரை ரூ. 26 லட்சம் செலுத்தியுள்ளேன். இன்னும் ரூ. 41 லட்சம் செலுத்த கோரி அந்த நிதி நிறுவனத்தினா் மிரட்டுகின்றனா்.

இது குறித்து துணை காவல் ஆணையரிடம் புகாா் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள வந்ததாகக் கூறினாா். இதையடுத்து போலீஸாா் அவரை எச்சரித்து நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க