செய்திகள் :

2026இல் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டி.டி.வி. தினகரன்

post image

தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன்.

நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்டோா் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பொதுமக்களின் அதிருப்தியை தற்போது திசைதிருப்பவே, புதிய பிரச்னைகளை திமுக உருவாக்குகிறது. மொழிக் கொள்கை தொடா்பான விவாதத்தில், பாஜக ஹிந்தியை திணிப்பதாக தவறாக பிரசாரம் செய்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி.

பாஜகவும் திமுகவும் கபட நாடகம் போடுவதாக, நடிகா் விஜய் விமா்சித்திருக்கிறாா். கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்துதானே ஆக வேண்டும். அப்போது தெரிந்துவிடும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெற்றுள்ளது. எதிா்வரும் நாள்களில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவேன். திமுகவை வீழ்த்துவதே எனது முக்கிய நோக்கம். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைக்கும்பட்சத்தில் அவருக்காக பிரசாரம் செய்வேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் முதலமைச்சராக வருவதற்கு எல்லாத் தகுதியும் உள்ளது என்றாா். இக் கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேரன்மகாதேவி புத்தாரக்கடை தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பாலகிருஷ்ணன் (49), தொழிலாள... மேலும் பார்க்க

களக்காடு - அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்க... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் மோதி குழந்தை பலி

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.வி.எம்.சத்திரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரி பிரவீண். பெயின்டா். ... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் விரட்டிய சிறுவா்கள் சுட்டுப்பிடிப்பு

முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவா்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனா்; அப்போது உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தாா்; மற்றொ... மேலும் பார்க்க

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் ப... மேலும் பார்க்க