செய்திகள் :

Operation Sindoor: ``வீழ்த்தப்பட்ட 6 பாகிஸ்தான் விமானங்கள்" - முதல்முறையாக பேசிய IAF தலைவர்

post image

இந்திய விமானப் படைத் (IAF) தலைவர் ஏ.பி சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Operation Sindoor
Operation Sindoor

பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் சேதம்

பெங்களூரில் விமானப்படைத் தளபதி எல்.எம். கத்ரேவின் சொற்பொழிவில் பேசிய அவர், மே 10-ம் தேதி இந்தியா பாகிஸ்தானின் இராணுவத்தளங்களில் தாக்குதல் நடத்தியபோது ஜகோபாபாத் விமானப்படை தளத்தில் அமெரிக்க தயாரிப்பான F-16 விமானம் சேதமடைந்ததாகக் கூறியுள்ளார். அத்துடன் இரண்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் 3 நாள் தாக்குதலில் பாகிஸ்தான் சமரசம் பேசும் நிலைக்கு வந்ததாகவும், அப்போது சேதமடைந்த விமானத்தளங்கள் இன்று வரை மீண்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

300 கி.மீ தொலைவிலிருந்து தாக்குதல்!

"இந்தியாவின் தாக்குதலில் குறைந்தபட்சம் 5 தேர்ந்த விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பெரிய விமானமும் வீழ்த்தப்பட்டது அது ELINT விமானம் அல்லது AEW&C (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு) விமானமாக இருக்கலாம். இந்த தாக்குதல்கள் 300 கி.மீ தொலைவிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப் பெரிய தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்திய நிகழ்வு இதுதான்." எனக் கூறியுள்ளார்.

S-400 missile system

ரஷ்யா வழங்கிய 'கேம் சேஞ்சர்'

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவ ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராணுவ தலைவர் பொதுவெளியில் பேசுவது இதுவே முதன்முறை.

அவரது உரையில் ரஷ்ய தயாரிப்பான S-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்பை, 'கேம் சேஞ்சர்' என அழைத்துப் பாராட்டினார். சமீபமாக வாங்கப்பட்ட இந்த அமைப்பு பாகிஸ்தானின் விமானங்களை தொலைவிலேயே வைத்திருந்ததால் அவர்களால் நீண்ட தூர சறுக்கு குண்டுகளைப் பயன்படுத்த முடியாமல் போனதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஆப்பரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க