செய்திகள் :

Pakistan: "தோட்டாவிற்குத் தோட்டா எனப் பதில் அளிக்க வேண்டுமா?" - பாகிஸ்தானிடம் மோடி கேள்வி

post image

பிரதமர் மோடி குஜராத்திற்குச் சென்றிருக்கிறார். பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முதலாகத் தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றிருக்கின்றார்.

அங்கே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, "ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது.

இந்தியாவிலிருந்து தீவிரவாதம் என்னும் முள்ளை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் என்பது பிராக்ஸி போர் அல்ல... அது உங்களுடைய (பாகிஸ்தான்) தந்திரம். அப்படி நீங்கள் எங்கள் மீது போர் தொடுக்கிறீர்கள்.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

75 ஆண்டுகளாகச் சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக சுற்றுலாப் பயணிகள், மக்கள் என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் நீங்கள் தாக்குதல் நடத்தினீர்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

அதற்குப் பதில், தோட்டாவிற்குத் தோட்டா என நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா?

இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், எங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்போது திரும்பத் தாக்க யோசிக்கமாட்டோம். எங்களுடையதும் போர் வீரர்களின் பூமிதான் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறோம்.

நான் இங்கு இரண்டு நாட்களாக இருக்கிறேன். அனைத்து இடங்களில் காவிக் கடல் கொக்கரிப்பது போல உணர்கிறேன். மூவர்ணக் கொடியும், தாய் நாட்டின் மீது அதீத அன்பும் அனைத்து உள்ளங்களில் தெரிகிறது.

தீவிரவாதம் உங்களுக்கு என்ன நன்மையைத் தந்தது? இதைப் பாகிஸ்தான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தானைத் தீவிரவாதம் என்னும் நோயிலிருந்து விடுவியுங்கள். அமைதியான வாழ்க்கை வாழுங்கள், நன்கு உண்ணுங்கள் அல்லது என்னுடைய தோட்டாக்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"உதயநிதிக்கு ED என்றால் 2011 சட்டமன்றத் தேர்தலிலிருந்தே பயம்" - நயினார் நாகேந்திரன் தாக்கு

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிகிறோம். அதில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாத... மேலும் பார்க்க

கீழடி: `அமர்நாத் அறிக்கை வெளியாவது சிலருக்கு பிடிக்கவில்லை; காரணம்..!’ - பாலகிருஷ்ணன் IAS

கீழடி தொடர்பாக ஆய்வு செய்த ASI ( Archeological Survay of India) ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன், அதனை இந்திய தொல்லியல் துறைக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வு அறிக்கையில் சில மாற்றங்கள் செய... மேலும் பார்க்க

'மாணவர்களாக மட்டும் இருங்கள்; மீறினால்...' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அரசு கட்டளை!

நாளுக்கு நாள் வெளிநாட்டு மாணவர்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் காட்டும் அதிரடிகள் அதிகரித்து கொண்டே போகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், "அமெரிக்க அரசிற்கு எதிராகவும், அதன் கொள்கைக்கு எதிராகவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - சிந்து நதி ஒப்பந்தம்: "நம் நாடு எப்படி அழிக்கப்பட்டது தெரியுமா?" - மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது..."நான் இன்றைய தலைமுறையினரிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு நமது நாடு எப்ப... மேலும் பார்க்க

இல.கணேசனின் 80 வது பிறந்தநாள் விழா; தன் மனைவியுடன் கலந்துகொண்ட விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்

சென்னையில் நடைபெற்ற நாகலாந்து மாநில ஆளுநர் மேதகு திரு இல.கணேசன் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழாவில் விஐடி துணைத்தலைவர் டாக்டர் திரு ஜி.வி.செல்வம் அவர்கள் தன் மனைவி திருமதி அனுஷா செல்வம் அவர்களுடன் கல... மேலும் பார்க்க

வியாசர்பாடி சம்பவம்: `இது மக்களாட்சி அல்ல, திமிர் பிடித்த பாசிச ஆட்சி' - ஸ்டாலினை சாடிய விஜய்

தவெக தலைவர் விஜய் சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று( மே 26) ஏற்பட்ட தீவிபத்து குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "... மேலும் பார்க்க