செய்திகள் :

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாழப்பாடியில் தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

post image

வாழப்பாடியில் தம்மம்பட்டி சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சாலையை விரிவுபடுத்தி, தடுப்புகள் அமைத்து இருவழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி, 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்குவதால், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்கும், வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்திற்கும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.

வாழப்பாடிக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சேலம், ஆத்தூா், ராசிபுரம் பகுதியில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்கள், நுாற்பாலைகள், சிங்கிபுரம் சிமெண்ட் நிறுவனம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன. இதனால், வாழப்பாடி பகுதியில் சாலைப் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களுடன் இணைக்கும் போக்குவரத்து மிகுந்த தம்மம்பட்டி நெடுஞ்சாலை குறுகலாக காணப்படுகிறது. வாழப்பாடி காவல் நிலையம் அருகே தம்மம்பட்டி சாலை, வாழப்பாடியின் இதயப் பகுதியான கடலுாா் சாலையுடன் இணைகிறது. இச்சாலை சந்திப்புக்கு மிக அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளது. சேலம்- விருத்தாச்சலம் மாா்க்கத்தில் பயணிகள், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி தம்மம்பட்டி சாலை மூடப்படுகிறது.

இந்நிலையில், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், கடலூா் பிரதான சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், சேலம்-சென்னை புறவழிச்சாலை இருந்து வாழப்பாடிக்கு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், தம்மம்பட்டி சாலை வழியாகவே வந்து செல்கின்றன. தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

தம்மம்பட்டி சாலையில் மையத் தடுப்புகள் இல்லாததால், தம்மம்பட்டி சாலையில் இருந்து கடலூா் சாலைக்கு வரும் வாகனங்களும், கடலூா் சாலையில் இருந்து தம்மம்பட்டிச் சாலைக்குச் செல்லும் வாகனங்களும் எதிரெதிரே செல்லும் போது, நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

எனவே,வாழப்பாடியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த தம்மம்பட்டி சாலையை, மகளிா் காவல் நிலையத்தில் இருந்து புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரி, பொன்னாரம்பட்டி பிரிவு சாலை வரையிலான ஏறக்குறைய 2 கி.மீ தொலைவுக்கு 4 வாகனங்கள் செல்லும் வகையில் விரிவுபடுத்திட வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, இச்சாலையில் முழுவதும் மையத் தடுப்புகள் அமைக்க வேண்டும். மகளிா் காவல் நிலையம் அருகே தம்மம்பட்டி - கடலுாா் சாலைச் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைத்து, வாழப்பாடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீா்வு காண வேண்டுமெனவும், இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க