செய்திகள் :

அத்தியாயம் முடிந்தது..! ரொனால்டோவின் பதிவினால் ரசிகர்கள் சோகம்!

post image

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி புரோ லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடி வருகிறார்.

அல்-நசீர் அணி அல் ஃபடெக் உடன் 2-3 என தோல்வியுற்றது. சௌதி லீக்கில் இந்தப் போட்டிதான் ரொனால்டோவின் கடைசி போட்டி எனக் கூறப்படுகிறது.

அல்-நசீர் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 99 கோல்கள் அடித்துள்ளார்.

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் தகுதிபெறாமல் அல்-நசீர் அணி வெளியேறியதால் ரொனால்டோ மீது அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

40 வயதாகும் ரொனால்டோ இந்த சீசனிலும் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ரொனால்டோ கூறியது ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது.

ரொனால்டோ கூறியதாவது:

இந்த அத்தியாயம் முடிந்தது. இந்தக் கதை? இன்னும் எழுதப்படுகிறது. ரசிகர்கள் அன்புக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

உலக அளவில் அதிக கோல்கள் (936) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரொனால்டோ நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன் ஸ்கிரீனில் படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன்: கார்த்திக் சுப்புராஜ்

கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ. 1000 கோடியில் ஒரு படம் எடுப்பதை விட அந்தத்தொகையில், 20 அல்லது 30 படங்களை இயக்குவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். கிரீன்... மேலும் பார்க்க

மறக்கமுடியாத, மகத்தான கற்றல் அனுபவம்: சூரி

மாமன் படத்தில் நடிகர் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி மறக்க முடியாத, மகத்தான கற்றல் அனுபவம் எனக் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறியிருக்கும் சூரியின் நடிப்பில் சமீபத்தில்... மேலும் பார்க்க

மொழி விவகாரம்: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்!

தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார். கேரளத்தில் தக் லைஃப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டப... மேலும் பார்க்க

ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன்..!

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் உடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்ததுள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2, சலார் ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்ப... மேலும் பார்க்க

சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!

சங்கர் மகாதேவன் இசையில் உருவாகியுள்ள விழிப்புணர்வு பாடல் 22 மொழிகளில் வெளியாகவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைப் பாதுகாப்புக் குறித்த யாத்ரா கவாச் எனும் நிகழ்ச்சியில் இன்று... மேலும் பார்க்க