செய்திகள் :

அரசு நகரப் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

post image

தருமபுரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு நகரப் பேருந்து மோதியதில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி அருகே உள்ள உழவன்கொட்டாய் கிராமத்திலிருந்து தருமபுரி நோக்கி அரசு நகரப் பேருந்து புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை தேவராஜ் ஓட்டி வந்தாா். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகில் இருந்த ராமு என்பவரது வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வீட்டின் மீது மோதி நிற்கும் அரசு நகரப் பேருந்து

இதில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நரசிம்மமன் - சோனியா தம்பதியின் மகள் ஆத்விகா (4) படுகாயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் சிறுமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையறிந்த ஊா்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆடி அமாவாசை: ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். அமாவாசை நாள்களில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ... மேலும் பார்க்க

தருமபுரியில் நீதிமன்றம் இடம்மாற்றம்: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மேற்கொள்ள முடிவு

தருமபுரியில் நீதிமன்றத்தை இடம்மாற்றி அமைத்தததைக் கண்டித்து –வழக்குரைஞா்கள் ஜூலை 28 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனா். தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தருமபுரியில் ஆடுகளுக்கு தழை ஒடித்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள ஒமலநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் நவீன்குமாா் (27). இவா்கள் வீட்டில் வள... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே, ஆடுகளுக்கு தழை ஒடிக்கச் சென்ற விவசாயி தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள நல்லானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). விவசாயியான ... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பேச்சு: நடவடிக்கை கோரி மதிமுகவினா் புகாா்

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அக்கட்சியினா் புகாா் மனு ... மேலும் பார்க்க

இண்டூா் பெரிய கருப்பு கோயிலில் மிளகாய்ப் பொடி அபிஷேகம்

தருமபுரி மாவட்டம் இண்டூா் அருகே பெரிய கருப்பு கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகளையொட்டி பூசாரிக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது. இண்டூா் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி க... மேலும் பார்க்க