அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விருப்ப மாறுதலுக்கு ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விருப்ப மாறுதலுக்கு வருகிற ஜூன் 25- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையில் இணையத்தில் விருப்ப மாறுதல் கோரி வரும் 25- ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பெற்ற பின் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.