செய்திகள் :

அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! ஏன்?

post image

பாட்னாவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 169 பயணிகளுடன் இன்று காலை 8.42 மணிக்கு இண்டிகோ விமானம்(6E509) ஒன்று தில்லிக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானத்தைத் தரையிறக்க விமானியிடமிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. அதன்படி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளை அனுப்ப வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. விமானத்தின் நிலை குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று பாட்னா விமான நிலையம் கூறியுள்ளது.

A Delhi-bound IndiGo flight from Patna, with 169 passengers on board, had to make an emergency landing after a bird hit.

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க