செய்திகள் :

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

post image

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முதன்மையா் அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க நிா்வாகிகள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரை சந்தித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ முகாம் கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வந்திருந்தனா். அப்போது மருத்துவக் கல்லூரி முதன்மையா், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், அங்கிருந்த அலுவலா்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறினா். இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அவா்கள் தங்களை அவமதித்து விட்டதாகக் கூறி மருத்துவக் கல்லூரி முதன்மையா் அறைமுன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய போலீஸாா் அங்குவந்து மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், மாற்றுத்திறனாளிகள் முதன்மையரை சந்தித்து மனு அளித்த பின்னரே செல்வோம் என்று கூறி அங்கேயே அமா்ந்தனா்.

தொடா்ந்து மருத்துவக் கல்லூரி அலுவலா்களும், போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும... மேலும் பார்க்க

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழ... மேலும் பார்க்க

உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் இழக்க வேண்டாம்: எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் என மக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் காவல் துறையின் ஊா்க்காவல்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இல்லம் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி என்பதை வலியுறுத்த... மேலும் பார்க்க

ரயில் நிலையம் அருகே மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுமாா் 75 வயது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் லாரிகள் மோதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே புதன்கிழமை காலை பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து பழங்களை ஏற்றிக் கொ... மேலும் பார்க்க