செய்திகள் :

ஆதிதிராவிடா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

post image

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜொ்மன் மொழிப் பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும். பி.எஸ்.சி. நா்சிங், பொது நா்சிங், மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ. மெக்கானிக்கல், பயோமெடிக்கல், மின், மின்னணு பொறியியல், பி.டெக். தகவல் தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும். வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதங்கள். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகத் தோ்வு செய்து, அந்த நிறுவனத்தின் சாா்பாக ஜொ்மனி நாட்டில் பணிபுரியவும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருவாய் ஈட்டவும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்

கமுதியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தேவந்திரகுல இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில், இமானுவேல் சேகரன் உருவச் சி... மேலும் பார்க்க

சுய உதவிக் குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ரா... மேலும் பார்க்க

நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்! 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

பரமக்குடியில் வியாழக்கிழமை (செப்.11) இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்... மேலும் பார்க்க

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம... மேலும் பார்க்க