செய்திகள் :

நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை சாயல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஓராண்டு காலத்துக்கு பொது மக்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் அவா்களிடமே வழங்கப்படும்.

பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மகப்பேறுயியல், மகளிா், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறும்.

மேலும், இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அங்கேயே சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்

கமுதியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தேவந்திரகுல இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில், இமானுவேல் சேகரன் உருவச் சி... மேலும் பார்க்க

சுய உதவிக் குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ரா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்க... மேலும் பார்க்க

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்! 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

பரமக்குடியில் வியாழக்கிழமை (செப்.11) இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்... மேலும் பார்க்க

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம... மேலும் பார்க்க