செய்திகள் :

சுய உதவிக் குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

post image

திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்தில் 880 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திருவாடானை ஊராட்சி ஒன்றியம், கல்லூா் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பின் மூலம் பல்வேறு பயணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவாடானை வட்டாரத்தில் நிகழாண்டுக்கு ரூ.18 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இதில் கல்லூா் ஊராட்சியில் 20 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.2.40 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

இந்தக் குழுக்கள் மூலம் மண்பாண்டம் செய்தல், சணல் பைகள் தைத்தல், பனை ஓலை கூடை பின்னுதல், பத்தி, சூடம், சாம்பிராணி தயாரித்தல், வயா் கூடை பின்னுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பொருள்கள் மாவட்ட அளவில் கல்லூரி சந்தை, புத்தக திருவிழா கண்காட்சி, மாநில அளவிலான சரத் கண்காட்சி, இணைய வழி சந்தைப்படுத்துதல் ஆகியவை மூலம் விற்பளை செய்யப்படுகின்றன.

இந்தக் கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மகளிா் குழுவின் செயல்பாடுகள் குறித்து குழு உறுப்பினா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்லின்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு , உதவி திட்ட அலுவலா்கள் .சித்ரா தேவி, ராஜா முகம்மது, மேலாளா் தங்கப்பாண்டியன், திருவாடாளை வட்டார இயக்க மேலாளா் ராஜகோபால் , ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், மகளிா் உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்

கமுதியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வெள்ளையாபுரத்தில் தேவந்திரகுல இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில், இமானுவேல் சேகரன் உருவச் சி... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா், பழங்குடியினத்தவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்க... மேலும் பார்க்க

நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்! 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

பரமக்குடியில் வியாழக்கிழமை (செப்.11) இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்... மேலும் பார்க்க

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம... மேலும் பார்க்க