செய்திகள் :

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2-ஆம் ஆண்டாக கிராமத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.75ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.35ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 4-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் பங்கேற்ற 50 காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளை முட்டி காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பிச்சாண்டி மற்றும் இளைஞா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெரு... மேலும் பார்க்க

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி நாளை (மே 16) தொடங்குகிறது. செய்யாறு வட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நலன் திட்ட அலுவலரும், வெம்பாக்கம் வட்டத்துக்கு மாவட்டம் ... மேலும் பார்க்க