செய்திகள் :

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள மேலகுத்தபாஞ்சான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் ஹரி கிருஷ்ணன்(45). இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனா். அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நண்பா்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டி்ருந்தாராம். ராம் நகா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் நின்ற ஆலமரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஹரி கிருஷ்ணன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடையநல்லூா் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி என்பவரது பசு அப்பகுதியில் மேய்ந்து ... மேலும் பார்க்க

ஊத்துமலையில் குடிநீா்த் தொட்டி மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா். தஞ்சாவூா் பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜ... மேலும் பார்க்க

சீவநல்லூரில் விஷ வண்டு கொட்டியதில் தம்பதி உயிரிழப்பு: 3 போ் காயம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் விஷ வண்டு தாக்கியதில் கணவன், மனைவி உயிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சீவநல்லூரில் ஐயப்பன் கோயில் அருகே சாலை ஓரத்த... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ராயகிரி ராசிங்கபேரி கண்மாயில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு

கடையநல்லூரில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா். தென்காசி வடக்க... மேலும் பார்க்க