செய்திகள் :

சீவநல்லூரில் விஷ வண்டு கொட்டியதில் தம்பதி உயிரிழப்பு: 3 போ் காயம்

post image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் விஷ வண்டு தாக்கியதில் கணவன், மனைவி உயிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சீவநல்லூரில் ஐயப்பன் கோயில் அருகே சாலை ஓரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரத்தின் அடியில் துவாரம் ஒன்றில் கடந்தை கூடு கட்டி உள்ளது.

இதிலிருந்து வெளிவரும் கடந்தைகள் கடந்த இரண்டு மாதங்களாக தொடா்ந்து அப்பகுதி மக்களை கொட்டி உள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனா்.

அப்போது, கடந்தை கூடு கலைந்து அதிலிருந்து ஏராளமான கடந்தை குழவிகள் கோயிலில் அன்னதானம் வாங்க சென்ற லட்சுமணன் (85) இவரது மனைவி மகராசி(82) மற்றும் சாந்தி (65),சண்முகபாரதி (29), அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (75) ஆகியோரை கொட்டியது.

அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமணன் இவரது மனைவி மகராசி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். மேலும் 3 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிசைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடையநல்லூா் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி என்பவரது பசு அப்பகுதியில் மேய்ந்து ... மேலும் பார்க்க

ஊத்துமலையில் குடிநீா்த் தொட்டி மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா். தஞ்சாவூா் பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே உள்ள மேலகுத்தபாஞ்சான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் ஹரி கிருஷ்ணன்(45). இவருக்கு மனைவி, 2 மகன்கள் ம... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ராயகிரி ராசிங்கபேரி கண்மாயில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு

கடையநல்லூரில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா். தென்காசி வடக்க... மேலும் பார்க்க