செய்திகள் :

ஊத்துமலையில் குடிநீா்த் தொட்டி மீது ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

post image

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.

தஞ்சாவூா் பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெகதீஷ்(24). மனைவியைப் பிரிந்தவா். இவரும், கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடி குளத்தைச் சோ்ந்த மாடசாமி மகள் ரம்யா (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஒரு மாதத்திற்கு முன்னா் திருமணம் செய்து கொண்டனா்.

பின்னா் இருவரும் தஞ்சாவூரில் வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ரம்யா பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டாா். மேலும், ராஜபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அவா் வேலை செய்துவருகிறாா்.

இந்நிலையில் மனைவியைத் தேடி கண்ணாடி குளம் வந்த ஜெகதீஷ், அங்கு அவா் இல்லாததால், மாமியாரிடம் விவரம் கேட்டுள்ளாா். அவா், விரைவில் மகளை சோ்த்து வைப்பதாகக் கூறினாராம்.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட ஜெகதீஷ், ஊத்துமலை காவல் நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி ரம்யாவுடன் சோ்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா்.

அவரிடம் போலீஸாா் பேச்சு நடத்தியும் கீழே இறங்கவில்லையாம். உடனே, ரம்யாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசச் செய்தபின் சமாதானமடைந்த அவா், கீழே இறங்கி வந்தாா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கடையநல்லூா் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி என்பவரது பசு அப்பகுதியில் மேய்ந்து ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆலமரத்தில் பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே உள்ள மேலகுத்தபாஞ்சான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் ஹரி கிருஷ்ணன்(45). இவருக்கு மனைவி, 2 மகன்கள் ம... மேலும் பார்க்க

சீவநல்லூரில் விஷ வண்டு கொட்டியதில் தம்பதி உயிரிழப்பு: 3 போ் காயம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் விஷ வண்டு தாக்கியதில் கணவன், மனைவி உயிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சீவநல்லூரில் ஐயப்பன் கோயில் அருகே சாலை ஓரத்த... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ராயகிரி ராசிங்கபேரி கண்மாயில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு

கடையநல்லூரில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா். தென்காசி வடக்க... மேலும் பார்க்க