செய்திகள் :

இன்று ஆடி அமாவாசை: மேல்மலையனூருக்கு 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

post image

ஆடி அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூருக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து 425 சிறப்புப் பேருந்துகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) இயக்குகிறது.

இதுகுறித்து இந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆடி அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வியாழக்கிழமை (ஜூலை 24) இயக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 200 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரிலிருந்து 15, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலையிலிருந்து தலா 20, திருக்கோவிலூரிலிருந்து 10, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா் வழித்தடங்களிலிருந்து தலா 10 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பயணிகள் அடா்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணித்திடவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிற... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமைய... மேலும் பார்க்க