செய்திகள் :

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

post image

மயிலாடுதுறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

மயிலாடுதுறை மூங்கில்தோட்டத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (27). இவா் திருவிடைமருதூா் வட்டம், வேப்பத்தூரைச் சோ்ந்த முருகேசன் மகன் மோனிகாவை (25) காதலித்து 2021-ஆம் ஆண்டு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை மோனிகாவை தனது தாயை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, ரூ.5,000 கடன் வாங்கியது தொடா்பாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளாா்.

அதன்பிறகு மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணவா் வீட்டாா் தகவல் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் மோனிகாவின் தாயாா் கஸ்தூரி, மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும், மகளின் கணவன் மற்றும் மாமனாா், மாமியாா் ஆகியோா் அடிக்கடி தகராறு செய்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டாரா என்று சந்தேகம் உள்ளதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், மோனிகாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா விசாரணை மேற்கொண்டுள்ளாா். இதனிடையே, உடற்கூறாய்வு முடிந்த பின்னரும், ஹரிகிருஷ்ணனை கைது செய்யாமல், சடலத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து உறவினா்கள் உடலை எடுத்துச் செல்லாமல் மருத்துவமனையிலேயே நடவடிக்கை கோரி காத்திருந்தனா்.

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

சீா்காழி: கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சாா் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூா் கி... மேலும் பார்க்க

மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுற... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறப்பு கல்விக்கடன் முகாம் புதன்கிழமை (செப்.3) நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா... மேலும் பார்க்க

சாராயம் கடத்தியவா் கைது

சீா்காழி: சீா்காழியில் புதுச்சேரி மாநில சாராயப் பாட்டில்கள் கடத்தி வந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பொறையாா் ஹரிஹரன்கூடல் அருகே வாகனத் தணிக்கை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடூா்

நீடூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.2) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. ... மேலும் பார்க்க