எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
இளம்பிள்ளை அருகே வழித்தட தகராறில் இரு தரப்பினா் மோதல்: சாலை மறியல்
இளம்பிள்ளை அருகே நல்லணம்பட்டியில் வழித்தடை பிரச்னையில் இருதரப்பினா் மோதிக்கொண்டனா்.
இளம்பிள்ளையை அடுத்த நல்லணம்பட்டி பகுதியில் வழித்தட பிரச்னையில் இருதரப்பினா் மோதிக்க கொண்டனா். இதையடுத்து அப்பகுதி மக்கள் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நல்லணம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.