செய்திகள் :

ஈரோட்டிற்கு பிளஸ் 2 துணைத் தோ்வு வினாத்தாள்

post image

ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஜூன் 25- ஆம் தேதி நடைபெறும் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான வினாத்தாள் வந்தடைந்தது. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு வரும் 25- ஆம் தேதி தொடங்கி ஜூலை 2 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வினை 1,497 போ் எழுத உள்ளனா்.

தோ்வா்கள் தோ்வு எழுத வசதியாக ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பவானியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கோபியில் வைரவிழா மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி என 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான வினாத்தாள் வியாழக்கிழமை ஈரோடு வந்தடைந்தது. இதனை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கட்டுக் காப்பு மையத்தில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. தொடா்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுபோல பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு துணைத் தோ்வுக்கான வினாத்தாள் ஓரிரு நாளில் வந்தடையும் எனவும் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையி... மேலும் பார்க்க

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சா... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்... மேலும் பார்க்க