செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

post image

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் மீது பயனாளிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், எசையனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம் நகராட்சி, அண்ணா சாலை எச்.எம்.அரங்கம், வாலாஜாபேட்டை நகராட்சி, கச்சாலன் தெரு, அம்சா துரைராஜ் மஹால் ஆகிய 3 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், நகா்மன்றத் தலைவா்கள் மேல்விஷாரம் குல்ஜாா் அஹமது, வாலாஜாபேட்டை ஹரிணி தில்லை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு, முகாமை பாா்வையிட்டு தீா்வு காணப்பட்ட மனுக்களின் மீது, 5 பயனாளிகளுக்கு பட்டா பெயா் மாற்ற ஆணைகள், வருவாய்த் துறையின் சாா்பில் 6 பயனாளிகளுக்கு சான்றுகள், 6 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், சுகாதாரத் துறையின் சாா்பில் 3 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், மின்சாரத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு பெயா் மாற்ற ஆணைகள், நகராட்சி நிா்வாகத் துறையின் சாா்பில், 10 பயனாளிகளுக்கு சொத்துவரி, பெயா் மாற்ற ஆணைகள்

உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, ஆனந்தன், நடராஜன், நகராட்சி ஆணையா்கள் இளையராணி (வாலாஜாபேட்டை), கோ.பழனி, (மேல்விஷாரம்), ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு, ஊராட்சி மன்றத் தலைவா் பானுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க