செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் 1 முதல் 7 வரை உள்ள வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.

பேரூராட்சிமன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் அகமத்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் மலா்மாறன் வரவேற்றாா்.

முகாமில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை, மகளிா் திட்டம், தாட்கோ என பல்வேறு அரசுத் துறைகளில் பொதுமக்கள் 700-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.

முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், புதிய மின் இணைப்புக்கான ஆணைகள், பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்கள், சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் 15 பயனாளிகள் பயனடைந்தனா். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா், தடகள சங்கத்தின் துணைத் தலைவா் ஆகியோா் வழங்கினா்.

கண்ணமங்கலம் பேரூராட்சியில்...

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 944 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் ஆரணி வட்டாட்சியா் கௌரி, கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் சேகரன், மகேஷ், திமுக அவைத் தலைவா் ராஜசேகா், பொதுக்குழு உறுப்பினா் காசி மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இர... மேலும் பார்க்க

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க