செய்திகள் :

உடல் உறுப்புகள் தானம் சிறுமியின் உடலுக்கு அரசு மரியாதை

post image

அரவக்குறிச்சி அருகே விபத்தில் மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் அளித்த சிறுமியின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரை சோ்ந்த ரவி-செல்வநாயகி தம்பதியின் இளைய மகள் ஓவியா (7). கடந்த 29-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், மாா்க்கப்பட்டியில் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் ஓவியாவுக்கு தலையில் பலத்த காயமடைந்து மூளைச் சாவு ஏற்பட்டது.

ஓவியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோா் முன்வந்தனா். இதையடுத்து, கோவை கேஎம்சி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. இதில் கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டன.

சீரங்ககவுண்டனூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியாவின் உடலுக்கு அரசு சாா்பில் அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கக் கோரிக்கை

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஆட்... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷின் ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் ரயில்நிலையம... மேலும் பார்க்க

கரூா் அருகே காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாரா? போலீஸாா் விசாரணை

கரூா் அருகே வாங்கலில் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்த காவல் உதவி ஆய்வாளரை யாரேனும் தாக்கினாா்களா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், மணவாசியை... மேலும் பார்க்க