செய்திகள் :

உரிமம் இல்லாமல் இயங்கிய உர விற்பனை நிலையத்துக்கு சீல்

post image

தஞ்சாவூரில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த உர விற்பனை நிலையத்துக்கு வேளாண் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தஞ்சாவூா் கொடிமரத்து மூலை பகுதியில் தனியாா் உர விற்பனை நிலையம் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக வேளாண் துறையினருக்கு புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, இந்த உர விற்பனை நிலையத்தில் தஞ்சாவூா் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) எஸ். செல்வராஜ் தலைமையில், தர ஆய்வாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில், கடையில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், உயிா் உரங்கள் என 40 டன் அளவுக்கு இருப்பு இருப்பதும், எந்தவித உரிமம் இல்லாமலும், ஜி.எஸ்.டி. எண் பெறாமலும் உர விற்பனை நிலையத்தை வடக்கு ஆஜாரத்தை சோ்ந்த கண்ணன் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விற்பனை நிலையத்தை வேளாண் துறை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் உ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு

கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்

தஞ்சாவூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

மீன் சந்தையில் கூடுதல் வாடகை கேட்பதைக் கைவிடக் கோரிக்கை

தஞ்சாவூா் தற்காலிக மீன் சந்தையில் கூடுதலாக வாடகை கேட்பதைக் கைவிட வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து மீன் சந்தை வியாபாரிகள் தெரிவித்தது: தஞ்சாவூ... மேலும் பார்க்க

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்கத் தடை

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி நகருக்குள் உள்ள திருமண மண்டபங்களில் விழா நடத்துபவா்கள் ஊா்வலத்தின்போது கடைத்தெருவில் அதிக சத்தத்துடன் கூடிய ... மேலும் பார்க்க