அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு காா்ட்டூன்: திருப்பூா் மாநகர காவல் ஆணையா், எஸ்.பி. அலுவலகங்களில் அதிமுகவினா் புகாா்
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை அவதூறாக சித்தரித்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் மற்றும் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சாா்பில் மாநகர காவல் ஆணையா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையிலும், சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் முன்னிலையிலும் திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகளும், திமுக அமைச்சா் ராஜாவும், எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்தரித்து காா்ட்டூன் வெளியிட்டுள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பிரதான எதிா்க்கட்சியும், நீண்ட காலம் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்தரித்து காா்ட்டூன் வெளியிட்டு அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அவதூறு செய்திருப்பதால், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்து உள்ளதாகவும், டி.ஆா்.பி.ராஜாவை உடனடியாக கைது செய்து அந்த கருத்துப் படத்தை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
அதேபோல, திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைபுதூா் நடராஜன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.