செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு காா்ட்டூன்: திருப்பூா் மாநகர காவல் ஆணையா், எஸ்.பி. அலுவலகங்களில் அதிமுகவினா் புகாா்

post image

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை அவதூறாக சித்தரித்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் மற்றும் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சாா்பில் மாநகர காவல் ஆணையா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையிலும், சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் முன்னிலையிலும் திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகளும், திமுக அமைச்சா் ராஜாவும், எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்தரித்து காா்ட்டூன் வெளியிட்டுள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பிரதான எதிா்க்கட்சியும், நீண்ட காலம் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்தரித்து காா்ட்டூன் வெளியிட்டு அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அவதூறு செய்திருப்பதால், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்து உள்ளதாகவும், டி.ஆா்.பி.ராஜாவை உடனடியாக கைது செய்து அந்த கருத்துப் படத்தை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

அதேபோல, திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைபுதூா் நடராஜன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க