செய்திகள் :

எரிசக்தி பாதுகாப்பில் மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்: வெளியுறவுச் செயலா் மிஸ்ரி

post image

எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரவித்தாா்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில், குஜராத்தில் உள்ள அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடியின் பிரிட்டன், மாலாத்தீவு பயணம் குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை பேசிய வெளியுறவுச் செயலா் மிஸ்ரியிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ‘எரிசக்தி பாதுகாப்பு விவகாரத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரட்டை நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கவில்லை’ என்று பதிலளித்தாா்.

‘ரஷியாவின் எரிசக்தி நிறுவனங்கள் மீதான தடை குறித்து பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துவாரா?’ என்ற கேள்விக்கு, ‘இதில் இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க

தனிக் கவனம் பெறும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்! காரணம்?

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.திரைத்துரை... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க