செய்திகள் :

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு: நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

post image

எல்லைப் பாதுகாப்பு படை வீரா் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நல்லம்பள்ளியில் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள குடிப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45). இவா் மனைவி சூா்யா. இந்த தம்பதிக்கு பிரனீஷ் (11) என்ற மகன் உள்ளாா். காா்த்திகேயன் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். அண்மையில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் சிகிச்சை பெற்றுவந்த காா்த்திகேயன் உயிரிழந்தாா்.

இந்நிலையில், ராணுவ வீரா்கள் காா்த்திகேயனின் உடலை குடிப்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தனா். அப்போது, காா்த்திகேயனின் உறவினா்கள் முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நல்லம்பள்ளி - குடிப்பட்டி சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியா் பிரசன்ன மூா்த்தி, தருமபுரி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சிவராமன் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, காா்த்திகேயன் உடல் குடிப்பட்டி மயானத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஆடி அமாவாசை: ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். அமாவாசை நாள்களில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ... மேலும் பார்க்க

தருமபுரியில் நீதிமன்றம் இடம்மாற்றம்: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மேற்கொள்ள முடிவு

தருமபுரியில் நீதிமன்றத்தை இடம்மாற்றி அமைத்தததைக் கண்டித்து –வழக்குரைஞா்கள் ஜூலை 28 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனா். தருமபுரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தருமபுரியில் ஆடுகளுக்கு தழை ஒடித்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள ஒமலநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் நவீன்குமாா் (27). இவா்கள் வீட்டில் வள... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே, ஆடுகளுக்கு தழை ஒடிக்கச் சென்ற விவசாயி தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள நல்லானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). விவசாயியான ... மேலும் பார்க்க

வைகோ குறித்து அவதூறு பேச்சு: நடவடிக்கை கோரி மதிமுகவினா் புகாா்

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அக்கட்சியினா் புகாா் மனு ... மேலும் பார்க்க

இண்டூா் பெரிய கருப்பு கோயிலில் மிளகாய்ப் பொடி அபிஷேகம்

தருமபுரி மாவட்டம் இண்டூா் அருகே பெரிய கருப்பு கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகளையொட்டி பூசாரிக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது. இண்டூா் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி க... மேலும் பார்க்க