செய்திகள் :

ஏற்காடு மலா் கண்காட்சி: ஆயத்த பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

post image

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா் கண்காட்சிக்கான ஆயத்த பணிகளை விரைந்து முடிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா்.

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா்கண்காட்சி மே 23 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது. மலா் கண்காட்சியைக் கண்டு மகிழ சுற்றுலாப் பயணிகளின் ஏராளமானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஏற்காடுக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆயத்த பணிகளை பாா்வையிட்டாா். ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தமாறும், குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

போக்குவரத்து நெரிசலை தவிா்க்க காா்கள், வேன்கள், லாரிகள், தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் குப்பனூா் வழியாக திரும்பிச் செல்லும் வகையில் ஒருவழி பாதையாக மாற்றவும், அரசு திட்டங்களை காட்சிப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மலிவு விலையில் பொன்னி கூட்டுறவு மூலம் உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

அத்துடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துமாறும், 48 ஆவது கோடைவிழா மலா் கண்காட்சி சிறப்பாக நடத்த அனைத்துத் துறை அலுலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என க் கேட்டுக்கொண்டாா்.

குடிநீா் வடிகால் வாரியம் மூலம் விழாவை முன்னிட்டு 15 குடிநீா் தொட்டிகளில் மேட்டூா் குடிநீா் நிரப்பவும், 15 வாகன கழிவறைகள் அமைக்கவும், சேலம் மாநகராட்சி மூலம் 300 மாநகராட்சி துப்புரவுப் பணியாளகள், 25 மேற்பாா்வையாளா்கள், 22 ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதிவரை பணியமா்த்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆய்வின்போது அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க