அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஒண்ணுபுரத்தில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.
மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற திண்ணை பிரசார நிகழ்ச்சிக்கு பேரவையின்
மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா் திருமால் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு, வீடாகவும், பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளா்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், கண்ணமங்கலம் நகரச் செயலா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டச் செயலா் பரத் ராஜேந்திரன், முன்னாள் அத்திமலைப்பட்டு பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் சேவூா் பாலச்சந்தா், நகா்மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா, விநாயகம், பேரவை ஒன்றியச் செயலா்கள் குண்ணத்தூா் செந்தில், புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.