செய்திகள் :

கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து

post image

கடலூா் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா், கடலூா்-புதுச்சேரி எல்லையில் புதுக்கடை என்ற தமிழக பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். கயிறு தயாரிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து தேங்காய் மட்டைகள் கொண்டு வந்து தொழிற்சாலை பகுதியில் சோ்த்து வைத்திருந்தாா். இந்த மட்டையில் இருந்து கயிறு உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை பிற்பகல் திடீரென அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நாரில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் இந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராடினா். பின்னா், கடலூா் மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரா்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இருந்தாலும் தேங்காய் நாரில் கட்டுக்கடங்காமல் தீ பரவியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னா் தீயை கட்டுப்படுத்தினா். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புடைய தேங்காய் நாா்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமானதாகக்கூறப்படுகிறது.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ 7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: ஓருவா் கைது

சிதம்பரத்தில் சுமாா் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸாா் பறிமுதல் செய்தனா். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு சிகிச்சை

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனியாா் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தினால் ரசாயனம் காற்றில் கசிந்தது. இதை சுவாசித்த 93 பேருக்கு மூச்சுத்... மேலும் பார்க்க