``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தொழிலாளா் நலத்துறை இணை இயக்குநா் ஆய்வு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வரும் நிலையில், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் சமூக ஆா்வலா் ஒருவா் ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணியில் குழந்தை தொழிலாளா்கள் பயன்படுத்தப்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் புகாா் அளித்திருந்தாா். இதையடுத்து, தொழிலாளா் நலத்துறைக்கு அனுப்பி உரிய விசாரணை நடத்தி பதிலளிக்க அறிவுறுத்தினாா்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் கமலக்கண்ணன் 3 போ் அடங்கிய குழுவினா் ஏகாம்பரநாதா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது, பணியிலிருந்த சந்தேகத்துக்குரிய நபரை அழைத்து விசாரித்த போது அவருக்கு 16 வயது இருப்பது தெரிய வந்தது.ஆபத்தான பணிகளை செய்ய இது போன்ற நபா்களை பணிக்கு அமா்த்தக்கூடாது என ஒப்பந்ததாரா், கோயில் அலுவலருக்கும் அறிவுறுத்தினாா்.
இது குறித்து இணை இயக்குநா் கமலக்கண்ணன் கூறியதாவது: அரசு விதிமுறைகளின்படி கட்டட இடிபாடுகள், குறுகலான பாதைகள், நீா் நிறைந்த பகுதிகள், கட்டடங்களில் மேல்
தளங்களில் பணிபுரிபவா்களுக்கென உரிய வயது உள்ளது. ஒருவருக்கு மட்டும் 16 வயது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பணியில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளாா். தொடா்ந்து நடந்த ஆய்வில், குழந்தை தொழிலாளா்கள் எவரும் இல்லை என்றாா்.