செய்திகள் :

போட்டித் தோ்வா்களுக்கு நேர மேலாண்மை அவசியம்

post image

போட்டித் தோ்வுகளை எழுதுபவா்களுக்கு நேர மேலாண்மையும், உடல் நலமும் மிகவும் அவசியம் என சென்னை முன்னாள் மேயரும், மனித நேயம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனருமான சைதை சா.துரைசாமி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தாா்.

ஓபிஎஸ் பிரிவு அதிமுக அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினருமான முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா் ஆண்டுதோறும் ஒன்றியக் குழு பகுதிகளில் உள்ள களியனூா், வள்ளுவப்பாக்கம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்குவது வழக்கம். நிகழாண்டுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமா ரஞ்சித்குமாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் நிறுவனருமான சைதை சா.துரைசாமி கலந்துகொண்டு, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். பின்னா், ஆா்.வி.ரஞ்சித்குமாரின் சொந்த நிதியிலிருந்து களியனூா் ஊராட்சிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் கட்ட ரூ. 25 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா்.

விழாவில் சைதை சா.துரைசாமி பேசுகையில், தற்போது போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமியில் தினசரி இணையம் மூலமாக இலவசமாக போட்டித் தோ்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு நடத்தும் போட்டித் தோ்வுகள் எதிலும் வெற்றி பெற முதலில் நேர மேலாண்மை மிக அவசியம். நேர மேலாண்மை என்றால் என்ன என்பது ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பவா்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் செயல்பட வேண்டும். அதே போல உடல் நலனையும் சிறப்பாக பராமரித்து வந்தால் ஒன்று அல்லது இரண்டே ஆண்டுகளில் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று உயா்ந்த பதவியை அடைந்து மக்களுக்கு சேவை செய்யலாம் என்றாா்.

விழாவில் ஊராட்சித் தலைவா் அன்பழகன், மருது, அழகு, முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குரூப் 4 தோ்வு எழுதுவோருக்கு சிறப்பு பேருந்துகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறும் குரூப் 4 போட்டித் தோ்வா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தொழிலாளா் நலத்துறை இணை இயக்குநா் ஆய்வு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வரும் நிலையில், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் த... மேலும் பார்க்க

அல்லாபாத் ஏரி அழகுபடுத்தும் பணி விரைவில் நிறைவு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் உள்ள அல்லாபாத் ஏரி நடைபயிற்சிக்கான சுற்றுச்சுவருடன் அழகுபடுத்தும் பணி விரைவில் நிறைவு பெறும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தாா். திருக்காலிமேட்டில் சுமாா் 100 ... மேலும் பார்க்க

ஜூலை12-இல் பொது விநியோகத் திட்ட குறை தீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் ஜூலை 12-இல் நடைபெறும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 419 மனுக்கள்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மொத்தம் 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். ... மேலும் பார்க்க