செய்திகள் :

கானாறுகளை தூா்வாரி தடுப்பணை கட்ட கோரிக்கை

post image

மழைக்காலம் தொடங்கி விட்டதால், குடியாத்தம் வட்டத்தில் உள்ள கானாறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்ட அளவில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் கி.பழனி தலைமைவ கித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பிரகாசம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போஜனாபுரம், உள்ளி, சீவூரான்பட்டி உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீரமைக்க வேண்டும். செட்டிகுப்பம் பகுதியில் மயான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். உள்ளி, ஆத்தோரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

மோா்தானா அணையின் வலதுபுற கால்வாயை துாரெடுத்து, சீரமைக்க வேண்டும். உப்பரப்பல்லி கிராமத்தின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பழுதடைந்த உள்ளி- மாதனூா் பாலத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் ஜி.சம்பத் நாயுடு, சேகா், பழனி, ஏ.சி.பாபு, துரைசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா். வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு: 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே காா் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். ஒரு மாணவி உள்பட 3- மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரி மா... மேலும் பார்க்க

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க குடியாத்தம் வட்டக் கிளையின் மாநாடு குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

மகளிா் உரிமை தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம்

புதிதாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற ஜூலை 15 முதல் நடைபெற உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மனுக்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்

பீஞ்சமந்தை மலைக் கிராம சாலையில் தடுப்புச் சுவரில் சிற்றுந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே காந்தன்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதக்காங்குட... மேலும் பார்க்க