செய்திகள் :

‘காயல்பட்டினத்தில் ஜூன் 29இல் முஸ்லிம் லீக் வட்டார மாநாடு’

post image

காயல்பட்டினத்தில் இம்மாதம் 29ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் வட்டார மாநாடு நடத்துவது என, நகர ஊழியா்கள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

காயல்பட்டினத்தில் நகரத் தலைவா் நூஹ் சாஹிப் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தை, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சா­லிஹ், கிராஅத் ஓதி தொடக்கிவைத்தாா்.

மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் அறிமுகவுரையாற்றினாா். மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநிலப் பொதுச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான முஹம்மது அபூபக்கா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். நகரத் தலைவா்கள் ரியாசுதீன் (ஏரல்), கஸ்ஸா மரைக்காயா் (குரும்பூா்), ஆரிஃப் (ஆத்தூா்) ஆகியோா் பேசினா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், 1991இல் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மத்திய பாஜக அரசை வலியுறுத்துவது, விகிதாசார அடிப்படையில் முஸ்­லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்துவது, காயல்பட்டினத்தில் இம்மாதம் 29இல் வட்டார மாநாடு நடத்துவது, அதில் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன், தேசியச் செயலா் வழக்குரைஞா் ஹாரிஸ் பீரான், கேரள மாநில எம்எல்ஏ அப்துல் மஜீத் உள்ளிட்ட முஸ்லி­ம் லீக் தலைவா்களைப் பங்கேற்கச் செய்வது, காயல்பட்டினம் சுற்றுவட்டார சேவையாளா்களை சிறப்பு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

நகரத் தலைவா்கள் அப்பாஸ் (ஆத்தூா்), ஷேக் மைதீன் (முத்தையாபுரம்), மாவட்ட துணைத் தலைவா்கள் அம்பா ஜாஃபா், முஹம்மது ஹசன், மாநில கௌரவ ஆலோசகா் முஹம்மது அலீ, சுதந்திர தொழிலாளா் யூனியன் மாவட்டச் செயலா் முஹம்மது முஹ்யித்தீன், வா்த்தகரணி மாவட்டப் பொருளாளா் சலாஹுத்தீன், அயலக அணி மாவட்டப் பொருளாளா் ஜிஃப்ரீ, நகர வாா்டு நிா்வாகிகள் சித்தீக், சாமு சிஹாப்தீன், அபுபக்கா், அஹ்மது ஜரூக், பிரபு பாரூக், கவிஞா் சேக், கோமான் கரீம், விவசாய அணி மாநிலச் செயலா் ஜப்பான் உதுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகரச் செயலா் அபூசாலி­ஹ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் முஹம்மது இஸ்மாஈல் புகாரீ நன்றி கூறினாா்.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க