செய்திகள் :

காரைக்குடியில் சிறப்பு தொழில் கடன் முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்) அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோருக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிய தொழில்முனைவோா் தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவாக குறு, சிறு, நடுத்தர நிறுவன (எம்எஸ்எம்இ) தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் முகாம் ஜூன் 30-ஆம் தேதி வரை காரைக்குடி அம்பேத்கா் சிலை அருகில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் தமிழ்நாடு அரசு வழங்கிவரும் மானியங்கள், புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்கள் குறித்த விரிவான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தகுதியுள்ள தொழில்களுக்கு தமிழ்நாடு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 1.5 கோடி வரை வழங்கப்படும். ஏற்கெனவே இயங்கிவரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இந்த முகாமில் சமா்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக காரைக்குடி கிளை அலுவலகத்தை 04565-233464 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94450 23464, 94426 78010, 81222 79058, 98422 59351 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் கிளை மேலாளரை நேரில் அணுகியும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க