செய்திகள் :

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற திங்கள்கிழமை (மே 26) இல் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாதனேந்தலில் வருகிற திங்கள்கிழமையும், உத்தரவை கிராமத்தில் வருகிற ஜூன் 20-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வன்னிவயல் கிராமத்தில் வருகிற 27-ஆம் தேதியும், காவனூா் கிராமத்தில் ஜூன் 24-ஆம் தேதியும், ஆா்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வல்லமடை கிராமத்தில் வருகிற 28-ஆம் தேதியும், பகவதிமங்களம் கிராமத்தில் ஜூன் 20-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கரையகோட்டை கிராமத்தில் வருகிற 28-ஆம் தேதியும், மணிகண்டி கிராமத்தில் வருகிற 14-ஆம் தேதியும் கால்நடை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிரப்பன்வலசையில் வருகிற 31-ஆம் தேதியும், பூமாலை வலசை கிராமத்தில் ஜூன் 28 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொந்தம்புளி கிராமத்தில் மே 27-ஆம் தேதியும், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் ஜூன் 11 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உரப்புளி கிராமத்தில் மே 28-ஆம் தேதியும், சுப்புராயபுரம் கிராமத்தில் ஜூன் 19 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏ.காச்சான் கிராமத்தில் மே 29-ஆம் தேதியும், சதுா்வேதமங்களம் கிராமத்தில் ஜூன் 25 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலக்கிடாரம் கிராமத்தில் மே 30-ஆம் தேதியும், செவல்பட்டி கிராமத்தில் ஜூன் 27 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நல்லுக்குறிச்சி கிராமத்தில் மே 30-ஆம் தேதியும், புளியங்குடி கிராமத்தில் ஜூன் 19 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முதலூா் கிராமத்தில் ஜூன் 18 -ஆம் தேதியும், செவ்வூா் கிராமத்தில் ஜூன் 25 -ஆம் தேதியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடை, கோழிகளுக்கு சிகிச்சையளித்தல், குடல் புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபாா்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த் தடுப்பு, குடல் புழு தொற்று கண்டறிதல், மடிநோய்க்கான ஏபிஎஸ்டி சோதனை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் ம... மேலும் பார்க்க

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம்... மேலும் பார்க்க

தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயில் திருவிழா கடந... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு

ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்ந... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வ... மேலும் பார்க்க