அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
கிணத்துக்கடவு வட்டத்தில் நாளை மக்கள் தொடா்பு முகாம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம், வடபுதூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மக்கள் தொடா்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வடபுதூரில் புதன்கிழமை (ஜூன் 11) மக்கள் தொடா்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக நலன் கருதி இந்த முகாம் ஜூன் 13-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடபுதூா் எஸ்.வி. மஹால் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகிக்கிறாா். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக கொடுக்கலாம். மேலும், பயனாளிகளுக்கு ஆட்சியா் நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாகவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.