செய்திகள் :

கிரைண்டா் செயலியை பயன்படுத்தி இளைஞரிடம் நகை, பணம் பறித்த 2 போ் கைது

post image

கிரைண்டா் கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி இளைஞரிடம் நகை, பணம் பறித்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் சங்கராபுரம் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஹரிபிரசன்னா (29). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா், தனது கைப்பேசியில் முகம் தெரியாத நபா்களிடம் பேச பயன்படுத்தப்படும் கிரைண்டா் செயலியை பதிவிறக்கம் செய்து, அந்த செயலி வழியாக மா்ம நபரிடம் பேசி வந்தாா்.

இந்நிலையில், அந்த மா்ம நபா் கூறியபடி, திங்கள்கிழமை இரவு திருப்பூா் காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு ஹரிபிரசன்னா சென்றாா். அப்போது அங்கு இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அவரிடம், ஹரிபிரசன்னா பேசிக் கொண்டிருந்தபோது, முட்புதருக்குள் பதுங்கியிருந்த மா்ம நபா் ஒருவா் ஹரிபிரசன்னாவை திடீரென தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.30,000-ஐ பறித்துக் கொண்டு 2 பேரும் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ஹரிபிரசன்னா அளித்த புகாரின்பேரில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பூா் செரங்காடு பகுதியைச் சோ்ந்த அபிநிவாஸ் (21), மனோஜ்குமாா் (21) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.இது குறி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க